ஶ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் சமாதிநிலை அறக்கட்டளையின் கீழ் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது. இதனை நிறுவனரும் நிர்வாக அறங்காவலராக முனைவர். சி.கே.முத்துமணிராஜா நிர்வகிக்கிறார். இந்த அறக்கட்டளயின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவது பிரதான நோக்கமாகும். அதன்படி பிரதி சனிக்கிழமை நண்பகல் 12 அளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. மேலும் ஶ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் திருக்கோயில் டிரஸ்ட் மூலமாக ஆலயத்திருப்பணி மற்றும் கோயில் நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.